search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாலிபரிடம் பணம் பறிப்பு"

    • வேலூரை சேர்ந்தவர்
    • போலீசார் விசாரணை

    ஆம்பூர்:

    திருப்பத்தூர் மாவட்டம் எஸ்பி அலுவலகத்திற்கு நேற்று இரவு தொலைபேசி மூலம் மாதனூர் பஸ் நிலையத்தில் வாலிபர் ஒருவர் கத்தியை காட்டி மிரட்டி பொதுமக்களிடம் பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டதாக புகார் வந்தது.

    இதனையடுத்து ஆம்பூர் தாலுக்கா போலீசார் மாதனூர் பஸ் நிலையத்திற்கு சென்றனர். அப்போது வாலிபர் ஒருவர் பொதுமக்களை மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்டது தெரிய வந்தது.

    பின்னர் அவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தியதில் வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டாவை சேர்ந்த விஜயகுமார் என்பது தெரிந்தது.

    பின்னர் போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து ஆம்பூர் சிறையில் அடைத்தனர்.

    ×